Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
தமிழகம் முழுவதும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது என்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதுபோல அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள எதிர்த்து தனி நபர்கள் நேரடியாக தாக்கல் செய்துள்ள மனுக்களை பொதுநல வழக்காக கருத முடியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுஅளிக்க வேண்டும். அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
ஒருவேளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். அதைவிடுத்து பொதுநல வழக்காக தொடர முடியாது. இந்தவழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின்மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்டஅதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். மேலும்,தனிநபர் புகார் தொடர்பான மனுக்களை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கூடாது என பதிவுத்துறைக்கும் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT