Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் மக்கள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பொறுப்பேற்று உள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாய் வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், அவர் வெற்றி பெற்றபோதும் இந்தக் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிலையில், துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது மூதாதையர் வழிபட்ட அவரது குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் பொதுமக்கள் நேற்று வழிபாடு செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x