Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

எண்ணெய், எரிவாயு சேமிப்புக்கு ஒத்துழைப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

சென்னை

எண்ணெய், எரிவாயு சேமிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக, தனிச் சிறப்பு மிக்க செயல்பாட்டுக்கான விருதுதமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு மாதம், ‘சக்‌ஷம்’ என்ற பெயரில் ஜன.16 முதல் பிப்.15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா 16-ம் தேதி நடந்தது. இதில், எண்ணெய், எரிவாயு சேமிப்புக்காக பொதுத் துறைபெட்ரோலிய நிறுவனங்கள் கடந்த2020-ல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக, தேசிய அளவில் தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டுக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, கடந்த ஆண்டில் பெட்ரோலிய தொழில் துறையில் அதிகபட்ச அளவில் சேமிப்புகளை மேற்கொண்டதற்காக, தமிழகத்தின் மாநில அளவிலான பெட்ரோலிய துறை ஒருங்கிணைப்பாளருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை டெல்லியில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் தருண்கபூர் வழங்கினார். தமிழக நுகர்பொருள் விநியோகம் மற்றும்நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழக பிரிவு செயல் இயக்குநரும், பெட்ரோலிய துறைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளருமான பி.ஜெயதேவன் ஆகியோர் இந்தவிருதுகளை பெற்றுக் கொண்டனர்.

சக்‌ஷம்-2021 நிகழ்ச்சியை முன்னிட்டு, பிப்.15 வரை எண்ணெய் மற்றும் எரிவாயுவை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x