Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

காங்கிரஸுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்தால் வெல்லலாம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் கரோனா தடுப்பூசி போட்ட 56 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் தலைவர்கள் தடுப்பூசி போட்டு பரிசோதித்த பிறகே மக்களுக்குப் போடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது.

இந்தியாவில் முதல் தடுப்பூசியை குடியரசுத் தலைவருக்கும், 2-வது தடுப்பூசியை பிரதமருக்கும் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குப் பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்காது. கமல்ஹாசன் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x