Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

பிப்.1 முதல் செயல்பாட்டுக்கு வரும் உயர் நீதிமன்றம்

சென்னை

உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை பிப்ரவரி 1-ம்தேதி முதல் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் கடைசி வாரத்தில் இருந்து நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை. தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பெரும்பாலான வழக்குகள் காணொலி மூலமாக விசாரிக்கப்படுகின்றன.

இதனால் 10 சதவீத வழக்கறிஞர்கள் மட்டுமேஅன்றாடத் தொழிலை தொய்வின்றி தொடர முடிகிறது. எஞ்சிய 90 சதவீத வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றங்களை 100 சதவீத நேரடி விசாரணை நடைமுறையில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகளும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வரும் 18-ம் தேதி முதல் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களை வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x