Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

கரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் பங்கேற்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர் மனி, கனடா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்வது வழக்கம். மேலும் அவர்கள் மதுரை மாவட்ட கிராமங்களில் நடக்கும் பொங்கல் திருவிழாக்களிலும் கலந்து கிராம மக்களுடன் இணை ந்து பொங்கலிட்டு மகிழ்வார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து அவர்களைப் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு திருவிழா நாட்களில் அழைத்து வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற் றால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. வெளிநாட் டினரும் கரோனா தொற்று காலத்தில் தமிழகம் வர விரும்ப வில்லை. அதனால், இந்த ஆண்டு சுற்றுலாத் துறை சார்பில் ஜல்லிக் கட்டு, பொங்கல் திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு நடக் கவில்லை.

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமருவதற்கு நிரந்தரமாக கேலரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேலரியில் சுழற்சி முறையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை உற்சாகமாகப் பார்த்து மகிழ் வார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் இல்லாமல் அந்த கேலரியில் உள்ளூர் வி.ஐ.பி.க்கள், அவர்கள் குடும்பத்தினர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x