Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

காட்டாங்கொளத்தூரில் பல் மருத்துவர் தற்கொலை

ஈரோடு வீரப்பாசத்திரத்தை சேர்ந்தவர் பெண் பல் மருத்துவர் இந்து(27). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராக பணியாற்றி அங்கேயே விடுதியில் தங்கியிருந்தார்.

இந்து நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வரவில்லை. இரவு உணவுக்கும் வரவில்லை. இதையடுத்து, அவருடைய அறை கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை.

இதையடுத்து மறைமலைநகர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸார் மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து அறை கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது இந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீஸார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோட்டில் மரணமடைந்துள்ளார். அதில் இருந்தே இந்து மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது இந்த விபரீத முடிவுக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் எனவும் நெருங்கிய மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x