Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு தயாராகிறோம்: அருமனை பொங்கல் விழாவில் குஷ்பு நம்பிக்கை

அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் குஷ்பு பேசினார்.

நாகர்கோவில்

“தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு தயாராகி வருகிறோம்” என, அருமனை பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் அனைத்து இந்து சமுதாயம், ஆலய குழுக்கள் சார்பில் பொங்கல் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலதலைவர் முருகன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் குஷ்பு பேசும்போது, “ வேளாண் மசோதாவை கடந்த தேர்தல் அறிக்கையில் மாநில, தேசிய கட்சிகள் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தன. அதை மத்திய அரசு சட்டமாக்கினால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கரோனா காலத்தில் இந்தியாவில் தான் அனைத்து தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தெலங்கானா உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்திலும் வெற்றிக்கு தயாராகி விட்டோம். பெண்களுக்கு பதவியும், பாதுகாப்பையும் இக்கட்சி வழங்குகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல்திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தும், கடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். வரும் மக்களவை இடைத்தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் செண்டை மேளம் முழங்ககலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. இதில் தெய்வங்கள் வேடம் அணிந்த சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

விழாவில் முன்னாள் மத்தியஇணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x