Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

சட்டப்பேரவை தேர்தலில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

சட்டப்பேரவை தேர்தலில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், வல்லபிரசாத், தேசிய பொதுச் செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் இதில் சிறப்புஅழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளது. தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். காங்கிரஸுக்கு இருக்கும்பலம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிஅடிப்படையில் தொகுதிகளைக் கோருவோம்.

அனைத்து மாவட்ட தலைவர்களும் உங்கள் பகுதியில் கட்சியின் பலம், தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்புங்கள். தமிழக காங்கிரஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ராகுல்காந்தி, எந்த உதவியும் நமக்கு செய்யத் தயாராக இருக்கிறார். தொகுதிகளை நாங்கள் பெற்றுத் தருகிறோம். அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x