Last Updated : 07 Jan, 2021 09:12 PM

 

Published : 07 Jan 2021 09:12 PM
Last Updated : 07 Jan 2021 09:12 PM

மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் தண்டனை: மதுரை மகளிர் நீதிமன்றம்

மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி மதுரை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை ஊமச்சிக்குளம் அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (32). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2002-ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு கோமதியை ஞானவேல் குடும்பத்தினர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக கோமதி 2007-ல் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு தூண்டியதாக ஞானவேலை ஊமச்சிக்குளம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை மகளிர் நீதிபதி எஸ்.கிருபாகரன் மதுரம் விசாரித்தார்.

அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.தங்கம் ராஜாராம் வாதிட்டார்.

விசாரணை முடிவில் ஞானவேலுக்கு கூடுதல் வரதட்சணை கேட்ட பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x