Last Updated : 07 Jan, 2021 06:20 PM

 

Published : 07 Jan 2021 06:20 PM
Last Updated : 07 Jan 2021 06:20 PM

இரட்டைக் கொலையில் கைதான சாத்தான்குளம் காவலருக்கு 3 நாள் ஜாமீன்

மதுரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான தலைமை காவலருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை காவலர் தாமஸ் பிரான்சிஸ், தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஒரு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் உடன் பிறந்த சகோதரர் திருமணம் என்பதால் ஜனவரி 10 காலை 11 மணி முதல் ஜனவரி 12 மாலை 5 மணி வரை 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதே வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x