Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM
கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் நேற்று கூறியதாவது:
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அப்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டு, சந்தையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் தற்போது கோயம்பேடு சந்தை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
இந்த சந்தையில் தொடக்கத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக மாற்றப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மாதத்தில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விடுமுறை விடுமாறு கோயம்பேடு சந்தை நிர்வாகத்திடம் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கை ஏற்பட்டது. அதன்படி இனி வரும் காலங்களில் மாதத்தில் 2 மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை விடப்படும்.
இதுவரை காலை 9 மணியுடன் சந்தை மூடப்பட்டது. இனி பகல் 12 மணி வரை சந்தை இயங்கும். அதற்கான அனுமதியை நிர்வாகம் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT