Published : 30 Oct 2015 08:31 AM
Last Updated : 30 Oct 2015 08:31 AM
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த ஆய்வரங்கம், வரும் 4-ம் தேதி (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.
ஆழ்வார் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த ஆய்வரங்க நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான ‘தி இந்து’ மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில், இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து ஃபிரன்ட்லைன் முதுநிலை துணை ஆசிரியர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரை யாடலில் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான எம்.கே.நாராயணன், ஈழ அகதிகள் மறுவாழ்வு நிறுவன பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன், ‘இந்து’ என்.ராம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 044-28524445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு (காலை 10 முதல் மாலை 5 மணி வரை) தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், thc@thehinducentre.com என்ற மின்னஞ்சல் முகவரி யில் தொடர்புகொண்டும் பதிவு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT