Published : 24 Oct 2015 03:39 PM
Last Updated : 24 Oct 2015 03:39 PM
ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங் அவராகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, "வி.கே.சிங்கின் கருத்துகள் ஒட்டுமொத்த பாஜகவும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதை உணர்த்துகிறது. முன்னாள் ராணுவத் தளபதி ஒருவர் இத்தகைய கருத்தை தெரிவிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங் அவராகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT