Published : 30 Oct 2015 08:37 AM
Last Updated : 30 Oct 2015 08:37 AM

காந்தியவாதி சசிபெருமாள் மரணம்: நீதி விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத் தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கன்னியாகுமரி மாவட்டம் உண் ணாமலைக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி காந்தியவாதி சசி பெருமாள் செல்போன் கோபுரத் தில் ஏறி நின்று போராட்டம் நடத் தியபோது உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வும், அது குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வைகோவும், அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தியும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x