Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM
மத்திய அரசின் அனைத்து வேலைகள் மற்றும் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக் கிறது. உயர் நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் இளநிலைப் பணியான பி நிலை தவிர மீதமுள்ள எந்தப் பணிக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறுவது நியாயமற்றது.
எய்ம்ஸ், முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும்.
சில நிறுவனங்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதுஎன்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து நிறுவன வேலைவாய்ப்புகளிலும், மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் முழுமையான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT