Last Updated : 31 Dec, 2020 04:11 PM

 

Published : 31 Dec 2020 04:11 PM
Last Updated : 31 Dec 2020 04:11 PM

குமுளி மலைப்பாதையில் செல்ல ஜன.5-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கூடலூர்

குமுளி மலைப்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இப்பாதையில் செல்ல வரும் 5-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் - தேவதானப்பட்டி வரை பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் குமுளி மலைச்சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது. இதனால் டிச.24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தற்காலிகமாக இப்பாதை மூடப்பட்டது.

தற்போது பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து கொண்டுள்ளதால் வரும் 5-ம் தேதி வரை இப்பாதையில் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே சரக்கு உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியே மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x