Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

‘விபத்தில்லா மதுரை 2021 புத்தாண்டு’திட்டம்: சிறப்பு வாகனத் தணிக்கைக்கு மதுரை எஸ்பி உத்தரவு

2021-வது புதிய ஆண்டு இன்று (டிச. 31) நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருக் கும் சூழலில் கரோனா பரவலால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைக், கார் ரேஸ்களுக்கு ஏற்கெனவே தடை இருக்கும் நிலை யில், அதை மீறி வாகனங்களில் சுற்றுவோரைக் கைது செய்ய போலீஸார் தயாராக உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 2021-ல் விபத்து மரணங்களை வெகுவாகக் குறைக்க, எஸ்.பி. சுஜித்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்படி, டிச.31 நள்ளிரவில் இருந்து ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 12 மணி வரை ‘விபத்து இல்லாத மதுரை ’ என்ற சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தணிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு ள்ளது. மாவட்டம் முழுவதும் நான்கு வழிச்சாலை உட்பட அனைத்துச் சாலைகளிலும் விபத்து பகுதிகள், வாகனங்கள் வேகமாகச் செல்லும் சாலைகள், முக்கிய வளைவுகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை, வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்கா ணித்து அறிவுரை வழங்குதல், ஹெல்மெட் விழிப்புணர்வு உள் ளிட்ட போக்குவரத்து விதிகளை பொதுமக்களுக்கு போலீஸார் எடுத்துரைக்க உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கூறியதாவது: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யிலேயே, இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் விபத்துப் பகுதி களைக் கண்டறிந்து, அங்கு நள்ளிரவு முதல் முன் எச் சரிக்கை நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

இதற்காகச் சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெற்றி அடைந்தால் ஆண்டு முழுவதும் இதை அமல்படுத்தி மதுரை மாவட்டத்தில் விபத்து மரணங்கள், காயங்களை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x