Published : 30 Oct 2015 09:40 AM
Last Updated : 30 Oct 2015 09:40 AM

அதிமுகவுடன் கூட்டணியா?- நடிகர் கார்த்திக் பதில்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் படுமா என்ற கேள்விக்கு “சஸ் பென்ஸ்” என்று நடிகர் கார்த்திக் பதில் தெரிவித்துள்ளார்.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் பசும் பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கட்சியின ருடன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்றால், அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்த தவறிவிட்டோம். வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்பது சஸ்பென்ஸ்’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, அக்.30-ல் (இன்று) சென்னையில் தேவர் குருபூஜை விழா நடத்தி, நலத் திட்டங்கள் வழங்க உள்ளேன். அதனால் இன்றே வந்து அஞ்சலி செலுத்தியுள்ளேன். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x