புதுவையில் கரோனாவுக்கு 2 பேர் பலி: இதுவரை 629 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனாவுக்கு இன்று இருவர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 629 ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் இன்று (டிச.22) 3,195 பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், புதிதாக 49 பேருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 6, காரைக்காலில் 7, மாஹேவில் 6 பேர் என மொத்தம் 19 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 811 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள், 187 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 822 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 84, காரைக்காலில் 39, ஏனாமில் 7, மாஹேவில் 43 பேர் என 173 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 360 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதுவை முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் கதிர்காமம் கரோனா மருத்துவமனையிலும், சேலியமேட்டைச் சேர்ந்த 58 வயதுப் பெண் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 629 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இறப்பு சதவீதம் 1.66 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in