Last Updated : 22 Dec, 2020 03:05 PM

 

Published : 22 Dec 2020 03:05 PM
Last Updated : 22 Dec 2020 03:05 PM

முதல்வர், துணை முதல்வர் சங்கரன்கோவில் வருகையையொட்டி குற்றச் சம்பவங்களில் தொடர்புடையோருக்கு தென்காசி எஸ்.பி எச்சரிக்கை

குற்றச் சம்பவங்களில் தொடர்புடையோருக்கு தென்காசி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நாளை நடைபெறும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, முதல்வர் வரும்வழி மற்றும் விழா நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் அனைவரும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் எஸ்பி சுகுணாசிங் பேசும்போது, “நீங்கள் அனைவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் உங்கள் மீது குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு, உங்கள் செயல்கள் அனைத்தும் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் ஏதேனும் குற்றம் புரிந்தால் உங்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படக்கூடும்.

இனி வரும் காலங்களில் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்தால் உங்கள் மீது உள்ள குற்ற சரித்திர பதிவேட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x