துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட தங்க பேஸ்ட்: இருவரிடம் விசாரணை

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட தங்க பேஸ்ட்: இருவரிடம் விசாரணை
Updated on
1 min read

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.42.50 லட்சம் மதிப்பிலான 850.80 கிராம் தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு உரிய இரண்டு பயணிகளின் நடவடிக்கைகள் இருந்ததால் அவர்கள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து களிமண்ணால் மறைத்து வைக்கப்பட்ட 850, 80 கிராம் எடையுள்ள சுவை 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in