Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM

பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் சுவாமிகள் சென்னை விஜயம்

பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் சுவாமிகள் சென்னை விஜயம் (பட்டினப் பிரவேசம்) செய்து குரோம்பேட்டை அருகே திருநீர்மலையில் உள்ள ஆசிரமத்தில் எழுந்தருளியுள்ளார்.

ரங்கத்தில் உள்ள  பவுண்டரீகபுரம் மத் ஆண்டவன் ஆசிரமத்தில் 10-வது ஆச்சார்யனாக எழுந்தருளியிருக்கும் பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் பரமஹம்ஸேத்யாதி  நிவாஸ கோபால மஹா தேசிகன் சுவாமிகள் ஸஞ்சாரமாக, நேற்று சென்னை குரோம்பேட்டை அருகேதிருநீர்மலையில் உள்ள ஆஸ்ரமத்தில் எழுந்தருளியுள்ளார்.

நிவாஸப் பெருமாள் சந்நிதியில் தங்கி, முநித்ரய சம்ப்ரதாய ப்ரவர்த்தகர் திருக்குடந்தை தேசிகனால் ஆராதிக்கப்பட்ட  லட்சுமி ஹயக்ரீவனுக்கும் மற்றபெருமாள்களுக்கும் தனுர் மாத ஆராதனம் செய்கிறார். அதேபோல் வரும்15-ம் தேதி பகல் பத்தும், 24-ம் தேதி இராப்பத்து உற்சவங்களும் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், அடுத்தடுத்த நாட்களில் நம்மாழ்வார் திருவடி தொழில்,இயற்பா சாற்றுமுறை, தேசிக பிரபந்த சாற்றுமுறையும் நடைபெற உள்ளன.

பெரிய பறவாக்கோட்டை ஆண்டவன்  கோபால தேசிக மஹா தேசிகனின் நூற்றாண்டை முன்னிட்டு, வரும் 28-ம்தேதி, மார்கழி மாத ரோஹிணி திருநட்சத்திரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரில் உள்ள  ராம ஆஞ்சநேயர் கோயிலில், ’கோதை தமிழ்’என்ற தலைப்பில் திருப்பாவை உபன்யாசமும் நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x