Published : 12 Dec 2020 07:04 PM
Last Updated : 12 Dec 2020 07:04 PM

ஐஎன்எஸ் பருந்து மற்றும் கடற்படை சார்பாக ராமேசுவரம் அருகே கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணிகள்

ஐஎன்எஸ் பருந்து மற்றும் கடற்படை சார்பாக ராமேசுவரம் அருகே தாமரைக்குளம் முதல் வலங்காபுரி கடற்கரை வரையிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ்-பருந்து விமானதளம் மற்றும் கடற்படை ராமேசுவரம் அருகே தாமரைகுளம் முதல் வலங்காபுரி கடற்கரைவரையிலும் தூய்மைப்படுத்தும் பணிககளை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை ஐ.என்.எஸ்ஸ்-பருந்துவின் முதன்மை அதிகாரி வெங்கடேஷ் ஆர். ஜயர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிச்சியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஐஎன்எஸ்-பருந்து, கடற்படை மற்றும் டி.எஸ்.சி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் ஆர்வத்துடனும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 600 கிலோ மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x