Published : 24 Oct 2015 07:28 AM
Last Updated : 24 Oct 2015 07:28 AM
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தங்களது கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இதுவரை 78 தமிழக மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, நீர் கொழும்பு உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம், தூத்துக்குடி மீனவர்கள் துறைமுகம் முற்றுகை ஆகிய போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகு மீனவ சங்கப் பிரதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகள், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT