மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணை: கோப்புப்படம்
மேட்டூர் அணை: கோப்புப்படம்
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (டிச.10) விநாடிக்கு 7,608 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (டிச.11) காலை 7,641 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு இன்று காலை முதல் விநாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக உள்ளதால், அணை மட்டம் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 104.34 அடியாக இருந்தது. இன்று காலை 104.74 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 71.12 டிஎம்சியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in