Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

‘டர்ன் எக்ஸ்பர்ட்’, ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும் வணிக உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்துதல் ஆன்லைன் பயிற்சிப் பட்டறை: டிச.17, 18-ல் நடக்கிறது

புதிதாக வணிகம் செய்யத் தொடங்கியவர்களுக்கும், ஏற்கெனவே வணிகம் செய்துவரும் உரிமையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ‘டர்ன் எக்ஸ்பர்ட்’ - ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, வணிக உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங் ஒர்க்‌ஷாப் ஃபார் பிசினஸ் ஓனர்ஸ்) தொடர்பான ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளது.

வரும் 17, 18 ஆகிய 2 நாட்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் சந்தைப்படுத்துதல் தணிக்கை, சந்தைப்படுத்துதல் உத்தி, செயல்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் கீழ் பல வகையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

‘டர்ன் எக்ஸ்பர்ட்’ இயக்குநர் சங்கீதா எஸ்.அபிஷேக் இந்த ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளார். இவர் சந்தைப்படுத்துதல் ஆலோசகராகவும், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் பேராசிரியராகவும் உள்ளதோடு 1,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்குப் பயிற்சியும் அளித்துள்ளார்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.999/-. பங்கேற்க விரும்புவோர் https://rb.gy/l6siu8 எனும் லிங்க்கில் பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x