Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

விபத்தில் சிக்கிய வேனில் இருந்து 2 டன் குட்கா பறிமுதல்

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய வேனில் இருந்து 2 டன் எடையுள்ள குட்கா பொருட்களை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங் களூருவில் இருந்து வேலூர் நோக்கி நேற்று காலை மினி வேன் ஒன்று ஆம்பூர் அடுத்த சோலூர் அருகே வந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி அங்குள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.

வேன் விபத்துக்குள்ளா னதை தொடர்ந்து, அதிலிருந்த ஓட்டுநர் உட்பட 2 பேர் தப்பி யோடினர். இதைக்கண்ட பொதுமக்கள் ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் வேனில் சோதனை யிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் எடையுள்ள பான்பராக், பான் மசாலா, ஹான்ஸ், மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, விபத்துக் குள்ளான வேன் மற்றும் 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கிராமிய காவல் துறையி னர் வேன் பதிவெண்ணை கொண்டு தப்பியோடிய நபர் கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x