Published : 07 Dec 2020 10:28 AM
Last Updated : 07 Dec 2020 10:28 AM

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து நலமடைய வேண்டும்: ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து நலமடைய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07-12-2020) வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:

‘‘தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1925-ஆம் ஆண்டு பிறந்த வே.ஆனைமுத்து 95 வயதைக் கடந்தும் பெரியாரியக் கொள்கைகளுக்காக வாழ்ந்து வரும் பெரியவர். அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது மகனிடம் தொலைபேசி வழியாகப் பேசினேன்!

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அவர்கள் நலமடைய வேண்டும்; தனது அறிவுப்பணியைத் தொடர வேண்டும் என விழைகிறேன்!’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x