Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ்

கடந்த 2017 - 2019 வரையிலான காலகட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பில் இருந்தனர். அதன்பிறகு, 2019-ம் ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேனாண்டாள் முரளி தலைமையிலான புதிய நிர்வாகிகள் சங்கத்துக்கு தேர்வாகியுள்ளனர். இந்த சூழலில், அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அலுவலர் பிரிவின் தணிக்கை குழு விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விஷால் தரப்பில் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய நிர்வாகிகள் பதவிக்கு வரும்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுதான் இது என்று பதில் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x