Last Updated : 05 Dec, 2020 01:18 PM

 

Published : 05 Dec 2020 01:18 PM
Last Updated : 05 Dec 2020 01:18 PM

புதுச்சேரியில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை

புதுச்சேரியில் இன்று புதிதாக 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 5) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,001 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 18 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாம் 2 பேருக்கும், மாஹே 19 பேருக்கும் என மொத்தம் 44 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 614 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 209 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 177 பேரும், வீட்டு தனிமையில் 242 பேரும் என மொத்தம் 419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 52 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 176( 97.22 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 259 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 75 ஆயிரத்து 783 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x