பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளையும் உடனே அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளையும் உடனே அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அனைத்து நடை பாதை கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், “பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையை நடைபாதை கடைகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு நடைபாதை கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கிருந் தவர்களின் மறுவாழ்வுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளன. எனவே, அனைத்து நடைபாதை கடை களையும் அப்புறப்படுத்த அதி காரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

என்.எஸ்.சி. போஸ் சாலையில் (பூக்கடை முதல் பாரிமுனை வரை) உள்ள அனைத்து நடைபாதை கடை களையும் உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சியும், போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணைய ரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை கடுமையாக அமல் படுத்த மாநகராட்சி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண் டும். இப்போது கடை வைத்திருப் பவர்களோ, முன்பு கடை வைத்தி ருந்தவர்களோ மீண்டும் ஆக்கிர மித்து கடை போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடைபாதை களை அகற்றிவிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரர் மீண்டும் நீதி மன்றத்தை அணுகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in