Last Updated : 04 Dec, 2020 03:35 PM

 

Published : 04 Dec 2020 03:35 PM
Last Updated : 04 Dec 2020 03:35 PM

புதுச்சேரியில் புதிதாக 46 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 46 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.4) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 2,307 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-20, காரைக்கால்-2, ஏனாம்-4, மாஹே-20 என மொத்தம் 46 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், ஏனாம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 614 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 165 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 274 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தம் 427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 124 (97.20 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 952 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 481 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x