Published : 27 Mar 2014 12:04 PM
Last Updated : 27 Mar 2014 12:04 PM

பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி தமிழகத்தில் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகின்றனர்.

ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் வடசென்னை, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் தொகுதி), திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் பிரகாஷ் காரத் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சீத்தாராம் யெச்சூரி, ஏப்ரல் 19, 20, 21 ஆகிய தேதிகளில் விருதுநகர், மதுரை, நாகர்கோவில், விழுப்புரம் தொகுதிகளிலும், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், திருச்சி ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி (தஞ்சாவூர் தொகுதி), கீடிநவேளூர் (நாகை தொகுதி) ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x