Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

பாகூர் பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் அழுகல் விவசாயிகள் வேதனை

நிவர் புயலின்போது பெய்த கனமழையால் புதுச்சேரி அருகே ஆயி ரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழு கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் நிவர் புயலின்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. 30 செ.மீட்டருக்கு மேல் பதிவான மழையின் கார ணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கிராமப் புறங்களில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் அனைத்து விளை நிலங்களிலும் மழைநீர் பெரிய அளவில் தேங்கியது.

இதன் காரணமாக பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம், சேலியமேடு, பின்னசிகுப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “மழை நீரை வெளியேற்ற வழி தெரியாமல் வேதனையில் உள்ளோம். அரசு வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி இருந்தால் இவ்வளவு பெரிய சேதம் வந்திருக்காது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நஷ்டமாகிவிட்டது. அரசு உடனடியாக இதனை பார் வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x