Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை: டிச.1 முதல் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு

சென்னை

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய வேளாண்மை, எரிசக்தி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நாளை சென்னை வருகின்றனர். டிசம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று புயல் சேதங்களை மதிப்பிடுகின்றனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் வலு குறைந்து தீவிர புயலாக புதுச்சேரி- மாமல்லபுரம் இடையில் கடந்த நவ.25-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. கடுமையான காற்று, பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. புயல் பாதிப்பு களை கடலூர் உள்ளிட்ட மாவட்டங் களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது பயிர் பாதிப்பு களை கணக்கிட்டு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீட்டு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும் அறி வித்தார்.

இதையடுத்து, புயல் பாதிப்பால் இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் கால்நடை இழப்புக்கு நிவாரணம் ஆகியவற்றை முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் பழனிசாமியை தொடர்பு கொண்டு புயல் பாதிப்பு நிலவரத்தை கேட்டறிந்ததுடன், போதிய உதவிகள் செய்யப்படும் என்றும் அறிவித்தார். மேலும், புயல் பாதிப்பால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

முன்னதாக, புயல் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட் டறிந்த மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷாவும் தேவையான உதவிகள் செய்வதாக அறிவித் திருந்தார். இந்நிலையில் தமிழகத் தில் நிவர் புயல் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவினர் (நாளை நவ.30) சென்னை வருகின்றனர்.

குறிப்பாக, மத்திய வேளாண் துறை செயலர், மத்திய நிதித்துறை செலவின பிரிவு செயலர், சாலை போக்குவரத்துத் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை செயலர், மீன்வளத் துறை செயலர், நீர்வளத் துறை செயலர் ஆகிய 7 பேரைக் கொண்ட குழுவினர் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இவர்கள், நாளை சென்னை வந்ததும் தலைமைச் செயலர் கே.சண்முகத்தை சந்தித்து ஆலோ சனை நடத்துகின்றனர். தொடர்ந்து, நாளை மறுதினம் டிசம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று புயல் சேதங்களை மதிப்பிடுகின்றனர். அதன்பின் முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x