Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
ஈரோட்டில் பிரச்சார சுற்றுபயணத்தை தொடங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று கோவை விமானநிலையம் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்றமுறை சென்னையில் வெள்ளம் வந்தபோது அதிமுகஆட்சியில் இருந்தது. மீண்டும்ஆட்சிக்கு வந்தும் அதிமுக அரசுஅதிலிருந்து பாடம் கற்கவில்லை. எந்த குடிமராமத்து வேலையும் நடைபெறவில்லை. நீர்வழித்தடங்கள் தூர்வாரப்படவில்லை. அரசால் சென்னை காப்பாற்றப்படவில்லை.
இம்முறை புயல் வலுவிழந்ததால்தான் சென்னையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. மறுபடியும் புயல், வெள்ளம் வரக்கூடிய சூழலில், தொடர்ந்து மிகப்பெரிய பாதிப்பை அடையக்கூடிய நிலைதான் உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதை அரசு செய்வதில்லை. சுற்றுப்புற சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் மனநிலையில் இந்த ஆட்சி இல்லை. 7 பேர் விடுதலைதான் திமுகவின் நிலைப்பாடு. அதற்காக ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனிமொழி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT