Published : 20 Oct 2015 09:42 AM
Last Updated : 20 Oct 2015 09:42 AM
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியின் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடக்க வாழ்த்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி யிருப்பதாவது:
ஆந்திராவின் புதிய தலை நகருக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வேண்டி தேமுதிக தலைவர் விஜயகாந் துக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதி லளிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடுவுக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘அமராவதியின் அடிக் கல் நாட்டு விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. அடிக்கல் நாட்டு விழா நடக்கும் 22-ம் தேதி கட்சி நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்பட் டுள்ளன. எனவே, அந்த மகிழ்ச்சிகர மான நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அனைத்து தொழில்நுட்ப வசதி களோடு அமராவதியை ஒரு முன்மாதிரி தலைநகரமாக தாங்கள் நிர்மாணிப்பீர்கள். அதற்கான அனைத்து திறமைகளும், முயற்சி யும் தங்களிடம் நிறைவாக உள் ளது. ஆந்திர மக்களின் ஆதர வும் ஆண்டவனின் ஆசியும் உங்களுக்கு துணை நிற்கட்டும்.
இவ்வாறு கடிதத்தில் எழுதி யிருப்பதாக அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
அமராவதியை ஒரு முன்மாதிரி தலைநகரமாக தாங்கள் நிர்மாணிப்பீர்கள். அதற்கான அனைத்து திறமைகளும், முயற்சியும் தங்களிடம் நிறைவாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT