Published : 26 Nov 2020 03:48 PM
Last Updated : 26 Nov 2020 03:48 PM

நிவர் புயல் எச்சரிக்கை: நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை தொடங்கியது

சென்னை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை புறநகர் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்ட அதிகாரி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இன்று (26.11.2020) மதியம் 3 மணி தொடங்கி இரவு 8 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி

1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்

2) அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்

3) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி

4) கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல்

5) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு

6) செங்கல்பட்டு - சென்னை சென்ட்ரல்

ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படவுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x