திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-க்குதள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின்

திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-க்குதள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த நவ.20-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவையாறில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது: நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திமுக தேர்தல் பிரச்சார பயணம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் நவ.28-ம் தேதி பிரச்சார பயணம் தொடங்கப்படும். நிவர் புயலால் தங்கள் பகுதிகளில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டால் திமுக இளைஞரணியினர் விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in