தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு

Published on

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கன மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை மட்டுமே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in