Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
திருப்பதி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
முதல்வர் பழனிசாமி அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு குடும்பத்தினருடன் காரில், திருப்பதி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை தரிசனம் செய்துவிட்டு, மாலையேசென்னை திரும்புகிறார். முதல்வர் சாலை மார்க்கமாக சென்று திரும்புவதால் செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT