Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

கனமழையால் வேகமாக நிரம்பும் ஏரி, குளங்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்வதுடன், அவ்வப்போது கனமழையும் பொழிகிறது. இதனால் குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 14,144 குளங்கள் உள்ளன. இவற்றில் 639 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. 339 குளங்கள் (91-99%), 475 குளங்கள் (81-90%), 554 குளங்கள் (71-80%) என்ற அளவில் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய4 மண்டலங்களில் உள்ள சிறிய, பெரிய நீர்த்தேக்கங்களிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2.24 லட்சம் மில்லியன் கனஅடி. தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் 1.40 லட்சம் மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. அதாவது, இவற்றில் 62.44 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

மேட்டூர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சோலையாறு உள்ளிட்ட 15 அணைகளும் படிப்படியாக நிரம்பி வருகின்றன என்று தமிழக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x