Last Updated : 16 Nov, 2020 12:37 PM

 

Published : 16 Nov 2020 12:37 PM
Last Updated : 16 Nov 2020 12:37 PM

புதுச்சேரியில் குறையும் கரோனா தொற்று; புதிதாக 13 பேர் பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

புதுச்சேரியில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்துள்ளது. புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ.16) வெளியிட்டுள்ள தகவல்:

''புதுச்சேரி மாநிலத்தில் 1,755 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 12 பேருக்கும், மாஹேவில் ஒருவருக்கும் என மொத்தம் 13 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 608 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 265 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 637 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 81 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 13 பேர் என 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 827 (95.84 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 61 ஆயிரத்து 570 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 20 ஆயிரத்து 265 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.''

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x