Last Updated : 15 Nov, 2020 05:20 PM

 

Published : 15 Nov 2020 05:20 PM
Last Updated : 15 Nov 2020 05:20 PM

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி தொடங்காததால் ஏமாற்றம்

தீபாவளி பண்டிகையான நேற்றும், இன்றும், கன்னியாகுமரியில் லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திரண்டனர். ஆனால், விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி தொடங்கவில்லை. தீபாவளி சீஸனில் இந்த ஆண்டு தான் படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு முறையான அறிவிப்பு வராததால், படகுகளின் வெள்ளோட்டத்தை முடித்து விட்டு அனுமதிக்காக அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளியன்றும், இன்றும் (நவ. 15) கன்னியாகுமரியில் லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திரண்டனர். முக்கடல் சங்கமத்தில் படித்துறை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்புடன் கடலில் நீராடி மகிழ்ந்தனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தனர். இதனால் 8 மாதத்திற்குப் பின்னர் கன்னியாகுமரி களைகட்டியிருந்தது.

ஆனால், விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி தொடங்கவில்லை. தீபாவளி சீஸனில் இந்த ஆண்டு தான் படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x