குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை; அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சியில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை; அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சியில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வடதமிழகத் கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் .

கனமழை எச்சரிக்கை

அடுத்த 24 (12.11.2020) மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

அடுத்த 48 (13.11.2020) மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்த இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

அண்ணா பல்கலை, மண்டபம் (ராமநாதபுரம் ) தலா 3 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர் (திருவள்ளூர்), மயிலாடுதுறை (நாகப்பட்டினம்), ஆலந்தூர், சென்னை விமான நிலையம் தலா 2 செ.மீ., வலங்கைமான், பெரம்பலூர், திருச்செந்தூர் தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in