Published : 10 Nov 2020 01:35 PM
Last Updated : 10 Nov 2020 01:35 PM

ஸ்டாலின் தலைமையில் 'தமிழகம் மீட்போம்' சிறப்புப் பொதுக் கூட்டங்கள்: அடுத்தகட்டமாக நடைபெறும் மாவட்டங்கள் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொள்ளும் 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான 2021-சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (நவ.10) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான 2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக சிறப்புப் பொதுக் கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

நவம்பர் 18 - தருமபுரி

நவம்பர் 21 - சேலம்

நவம்பர் 25 - திருநெல்வேலி/தென்காசி

நவம்பர் 29 - திருப்பூர்

டிசம்பர் 2 - கிருஷ்ணகிரி".

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x