Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

சென்னை நிர்வாக அலுவலகத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்எல்சி முதன்மை மேலாளர் தற்கொலை: கீழ்ப்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணை

என்எல்சி நிறுவனத்தின் வணிகப் பிரிவு முதன்மை மேலாளர், சென்னையில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தின் நிர்வாகஅலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிகப் பிரிவு முதன்மை மேலாளராக சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த எம்.எஸ்.ரகு (57) பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 12.30 மணி அளவில் அலுவலகத்தின் 5-வதுமாடிக்கு சென்ற ரகு, ஜன்னலை திறந்து அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் கிடைத்து வந்த கீழ்ப்பாக்கம் போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவரை யாரேனும் தள்ளிவிட்டனரா, தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x