Published : 14 Oct 2015 09:21 AM
Last Updated : 14 Oct 2015 09:21 AM

வளாக நேர்முகத் தேர்வு மூலம் அண்ணா பல்கலை.யில் 1,200 பேருக்கு வேலை

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்காக அக்டோபர் 1 முதல் 12-ம் தேதி வரை சென்னையில் வளாக நேர்முகத் தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தப்பட்டது. இதில் இன்போசிஸ், காக்னிசன்ட், டிசிஎஸ். அக்செஞ்சர், ஐபிஎம் ஆகிய 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த தேர்வில் மாணவ, மாணவிகள் 1,500 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 1,200 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் வழங்க நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வளாக நேர்முகத்தேர்வு டிசம்பரில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்கட்டமாக நடத்தப்பட்ட வளாக நேர்முகத் தேர்வில், ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரையான சம்பளத்தில் சுமார் 400 பேருக்கு வேலை கிடைத்ததாக அண்ணா பல்கலைக்கழக தொழில்நிறுவன ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் டி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x