சாத்தான்குளம் போலீஸாருக்கு எதிரான வழக்குகளில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் போலீஸாருக்கு எதிரான வழக்குகளில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

சாத்தான்குளம் போலீஸாருக்கு எதிரான வழக்குகளில் சிபிஐடி போலீஸார் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்துக்கு முன்பு சாத்தான்குளம் போலீஸாரால் ராஜாசிங் தாக்கப்பட்ட வழக்கு, மகேந்திரன் உயிரிழந்த வழக்கு மற்றும் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கிறது.

இதில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. மற்ற 3 வழக்குகளை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.

இந்த 3 வழக்குகளின் விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் மூடி முத்திரையிட்ட கவரில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் தாக்கல் செய்தனர்.

பின்னர், அனைத்து வழக்குகளி்ன் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in